அண்மைய செய்திகள்

recent
-

வித்யா கொலை: சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு


கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்பாணம் புங்குடுதீவில், மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்யா கொலை: சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு Reviewed by NEWMANNAR on December 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.