மட்டக்களப்பில் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் தலைமமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment