மன்னார் கடலோரத்தில் கரையொதுங்கிய அபூர்வ உயிரினம்...!
மன்னார் கடலோரத்தில் இன்று (02) இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
மிகப் பெரியகடல் மலைப் போல கரை ஒதுங்கிய கடற் பன்றியை கடற்படையினர் அப்புரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கே உரித்தான 08 கடற்பன்றிகளில் பாதி அழிவடைந்து விட மிகுதியும் தற்போது அழிவை எதிர் நோக்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கடற்பன்றிகளை காண்பதற்கே அரிதாகவுள்ள நிலையில், இவற்றின் அழிவு இலங்கைக்கு மிகப் பெரும் இழப்பு என மன்னார் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த மாதம் மன்னார் கடலோரத்தில் இதே போன்ற பாரிய கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் கடலோரத்தில் கரையொதுங்கிய அபூர்வ உயிரினம்...!
Reviewed by Author
on
December 03, 2016
Rating:

No comments:
Post a Comment