மாற்றாற்றல் கொண்டவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஓர் பிரஜையாக மாற்றியமைக்க அனைவரும் முன் வர வேண்டும்- ஜீ.குணசீலன்-Photos
மாற்றாற்றல் கொண்டவர்களை நாம் இறக்கத்துடன் அனுகுவதை விட அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள பிரஜைகளாக மாற்றி அவர்களை முன்னேற்ற அனைவரும் முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றாற்றல் கொண்டோர் தினத்தையொட்டி மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை(9) மாலை சர்வதேச மாற்றாற்றல் கொண்டோர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,,,
மாற்றாற்றல் கொண்டவர்கள் தொடர்பில் அவர்களை அனுகும் முறை, அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டிய சமூக உதவித்திட்டங்கள் வடக்கில் உரிய முறையில் நடை முறைப்படுத்தப்படாமையை காணக்கூடியதாக உள்ளது.
மாற்றாற்றல் கொண்டவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் அவை அமுல்ப்படுத்தப்படவில்லை.
அவர்களை நாங்கள் இறக்கத்துடன் உற்று நோக்குவதை விட அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஓர் பிரஜையாக மாற்றி அவர்களின் தேவைகளை அவர்கலே பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நாங்கள் அவர்களை மாற்றி அமைக்க வேண்டும்.
அவர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை நாம் வழிவகுத்துக்கொடுக்க வேண்டும்.
-எவ்வித பிரிவுகளும் இன்றி அவர்கள் அனைவர் போன்றும் சம அந்தஸ்துடன் வாழ வேண்டும்.என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
-குறித்த நிகழ்வில் மாற்றாற்றல் கொண்ட சிறார்களினால் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதோடு,பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன்,வைத்தியர் யூட் பச்சேக், சர்வமதத்தலைவர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாற்றாற்றல் கொண்டவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஓர் பிரஜையாக மாற்றியமைக்க அனைவரும் முன் வர வேண்டும்- ஜீ.குணசீலன்-Photos
Reviewed by NEWMANNAR
on
December 10, 2016
Rating:

No comments:
Post a Comment