அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிப்பு

மழைவீழ்ச்சி இல்லாமையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் சுமார் 9000 ஹெக்டயர் வயல் நிலங்கள் அழிவடையும் அபாயம் நிலவுவதாக வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறினார்.

உயரிய அறுவடை காலத்தில் வவுனியா மாவட்டத்தில 18000 ஹெக்டயர் வயல் நிலங்களில் நெல் பயிரிட இருந்த போதிலும் போதிய மழை இல்லாததன் காரணமாக 9000 ஹெக்டயர் அளவில் பயிரிடும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

வாவிகளிலும் ஏனைய நீர் நிலைகளிலும் காணப்படுகின்ற நீர் 4000 ஹெக்டயர் அளவிற்கே போதுமானது என்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் மழை இல்லாததன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 18000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள உழுந்து செய்கை அழிவடையும் அபாயம் உள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறினார்.
வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிப்பு Reviewed by NEWMANNAR on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.