தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நினைவஞ்சலிக்கூட்டம் மன்னாரில் நடை பெற்றது.-Photos
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் 'அம்மா' ஜெயலலிதாகவுக்கு இன்று புதன் கிழமை(7) மாலை மன்னாரில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
-குறித்த அஞ்சலி நிகழ்வில் அருட்தந்தை ஜெகதாஸ்,மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் 'அம்மா' ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு,அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நினைவஞ்சலிக்கூட்டம் மன்னாரில் நடை பெற்றது.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 07, 2016
Rating:

No comments:
Post a Comment