அண்மைய செய்திகள்

recent
-

கிளி.முருகானந்தா வகுப்பறை கட்டடம் சரிந்து வீழ்ந்தது

கிளி.முருகானந்தா வகுப்பறை கட்டடம் சரிந்து வீழ்ந்தது
நாட்டில் ஏற்படுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள்,உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் சற்றுமுன் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் தற்காலிக வகுப்பறைக் கட்டடம் கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது.

இன்று வீசிய கடும் காற்று காரணமாக கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின்­ 50 அடி நீளமான தகரக் கொட்­டகையுடன் கூடிய வகுப்ப­றை சரிந்து வீழ்ந்துள்­ளது.

மைதானத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த வகுப்பறையை இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தவில்லை,அதனால் குறித்த வகுப்பறை சரிந்து விழுந்த போதிலும் மாணவர்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது.
கிளி.முருகானந்தா வகுப்பறை கட்டடம் சரிந்து வீழ்ந்தது Reviewed by NEWMANNAR on December 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.