வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற கலாச்சார விழா
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(18) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதன்மை விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், விசேட விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, கே.பி.ஜெயதிலக, செந்தில் நாதன் மயூரன், வவுனியா மாவட்ட மேலதிக அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வனஜா செல்வரட்ணம், வலயகல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு மு.இராதாகிருஷ்ணன், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலைஞர்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கௌரவப்படுத்தினார். தமிழர் கலாச்சாரத்தினை பிரதி பலிக்கும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு இன்று(18) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதன்மை விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், விசேட விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, கே.பி.ஜெயதிலக, செந்தில் நாதன் மயூரன், வவுனியா மாவட்ட மேலதிக அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வனஜா செல்வரட்ணம், வலயகல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு மு.இராதாகிருஷ்ணன், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலைஞர்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கௌரவப்படுத்தினார். தமிழர் கலாச்சாரத்தினை பிரதி பலிக்கும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற கலாச்சார விழா
Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment