2017 இல் இலங்கையை சூழ்ந்துள்ள பிரச்சினைகள்.. எதிர்வரும் 3 மாதத்தில் பாரிய மாற்றம்!
ஒருவருக்கு தனது 12 வீடுகள் உள்ள ஜோதிட சக்கரத்தில் ராசி நாதன் மறைந்து இருந்தால் கெடு காலம்தான் என்று இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்லது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவார்கள்.
ஆனால் இயற்கை சமநிலை தர்மத்தின்படி ஒருவரது பாவ கணக்கு மற்றும் புண்ணிய கணக்கை விட கூடுதலாக காணப்பட்டால் அவருக்கு பாவ கணக்கு புண்ணிய கணக்கிற்கு சமனாகும் வரை கெடு காலம்தான்.
இப்படி ஒருவருக்கான கெடு காலம் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முழு நாட்டிற்கும் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்கள் தனி நபரின் ஜோதிடத்தில் குறிப்பிடப்படாத விடயங்கள் என்றே கூறவேண்டும்.
அடுத்து வரும் 3 மாதங்கள் நாடு, வரலாற்றில் இடம்பெறாத மிக கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார்.
சுத்தமான நீர் அடுத்து வரும் 2 மாதங்களுக்கே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்கு ஜிஎஸ்பி சலுகை இன்னும் கிடைக்கவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளின் அளவு மிக குறைவாகவே உள்ளது. சர்வதேச விமான நிலையம் தினமும் 8 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளில் ஏற்றம். வாழ்கைச்செலவு அதிகரிப்பு.
விவசாயிகளின் நெற் செய்கை 1/3 பகுதியால் பாதிப்பு. மாற்று பயிர்களை பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு தொல்லை அதிகரிப்பு. அத்துடன் H1N1 இன்வுலவன்சா வைரஸ் தொற்று கண்டியில் ஏற்பட்டுள்ளமை பாரிய அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில் நாட்டில் அரசியல் பலத்தை மாற்றக்கூடிய ஆட்சியை கவிழ்க்க புதிய ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே ஒரு கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்து மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை. லொத்தர் டிக்கட் விற்பனையாளர்கள் மீண்டும் 5 நாள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
அரசியல் ஸ்திரமற்ற நிலைமை. இவ்வாறு பல பிரச்சினைகள். இதனை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? பொருத்திருந்து பார்ப்போம்.
2017 இல் இலங்கையை சூழ்ந்துள்ள பிரச்சினைகள்.. எதிர்வரும் 3 மாதத்தில் பாரிய மாற்றம்!
Reviewed by Author
on
January 16, 2017
Rating:

No comments:
Post a Comment