அண்மைய செய்திகள்

recent
-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும் என கோரி (வெள்ளிக்கிழமை) வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட இளைஞர்கள் மற்றும் முகநூல் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 70 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு, தமிழர்களின் வீர வளையாட்டை தடை செய்யாதே உட்பட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on January 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.