அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பரவலாக மழை-Photos

வடக்கு,கிழக்கு உற்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதோடு நீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது விவசாய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

-எனினும் மன்னார் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மழை பெய்தது.
எனினும் இன்று சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்துள்ளது.

இதனால் மன்னார் நகரின் பல பகுதிகளிலும் மழையின் காரணமாக வெப்பம் குறைவடைந்த நிலை காணப்பட்டுள்ளது.

எனினும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ள இடங்களில் மழை பெய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில விவசாய கிராமப்பகுதிகளில் மாத்திரமே மழை பெய்துள்ளது.

அதிகலவான விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மழை பெய்யவில்லை எனவும் இதனால் தமது விவசாய செய்கைகள் அழிவடையும் நிலைக்கு வந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


-மன்னார் நிருபர்-
(21-1-2017)




மன்னாரில் பரவலாக மழை-Photos Reviewed by NEWMANNAR on January 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.