அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களுக்குரிய தீர்வினை நல்லாட்சி அரசு வழங்காது ஏமாற்றுவதாக சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு


தமிழ் மக்களின் பிரச்சினைக ளுக்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மைத்திரி-ரணில் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்களோ அமைச்சர்களோ இதய சுத்தியுடன் சமாதானம் தொடர்பில் பேசுவ தில்லை, மாறாக தேசிய அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கத்திலேயே செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இராணுவ கட்டமைப்பிற்குள் தமிழ் மக்களை வைத்திருக்க இந்த அரசாங்கம் விரும்புகின்றதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.      
               
தமிழர்களுக்குரிய தீர்வினை நல்லாட்சி அரசு வழங்காது ஏமாற்றுவதாக சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு Reviewed by Author on January 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.