அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை( 20 .01 .2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்
காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் Reviewed by NEWMANNAR on January 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.