அண்மைய செய்திகள்

recent
-

நாட்டுக்காக புதல்வர்களை துறந்த தியாகத்தந்தை !

தன் இரு புதல்வர்களைகளையும் நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி பாடகர் சாந்தன். அவரின் இழப்பு இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாக பதிவாகியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

25 வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு இசையால் சேவையாற்றிய மகத்தான கலைஞன் இன்று எம்மை விட்டு நீங்கியிருக்கின்றார்.

இவரது மரணம் இலங்கைத்தமிழர்கள் மற்றும் போராளிகள், அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்பாக பதிவாகியுள்ளது.

கட்சி சார்ந்த பாடல்களையும் அழகாக தொகுத்துப்பாடிய மகத்தான கலைஞன். அவரது மறைவுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக புதல்வர்களை துறந்த தியாகத்தந்தை ! Reviewed by NEWMANNAR on February 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.