அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனோர் காரியாலயம் தொடர்பிலான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்


காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல் தொடர்பான சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்காரியாலயத்திற்கு இருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சட்டத்தின் 11 பிரிவின் (அ) உறுப்புரையினை அகற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட வரை பொன்றை மேற்கொள்வதற்காக வேண்டி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளது.


காணாமல் போனோர் காரியாலயம் தொடர்பிலான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் Reviewed by Author on February 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.