இறப்பதற்கு முன் இந்தியர் ஒருவர் எழுதியது... கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்: உருக்கமான சம்பவம்
இந்திய அமெரிக்கர் பால் கலாநிதி புற்று நோயால் இறப்பதற்கு முன்பு எழுதிய முடிக்கப்படாத புத்தம் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனாரான பில்கேட்சை கண்ணீர் வர வைத்துள்ளது.
நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த அவர் மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது (when breathe become air) என்ற பெயரில் தன் வாழ்க்கையைப் பற்றி அதில் எழுதியுள்ளார்.
அப்புத்தகத்தை படித்துப் பார்த்த பில்கேட்ஸ். இது ஒரு மிகச்சிறந்த புத்தகம். வெகு நாட்களுக்கு பிறகு நான் படித்த புத்தகங்களிலே மனதை தொடக்கூடிய புத்தகம் என்று கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையில் அழாத எண்ணை இப்புத்தகம் அழ வைத்துவிட்டது. அதாவது கண்ணீர் சிந்த வைத்துவிட்டது என்று கூறி தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கலாநிதி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்புத்தகத்தை முடிக்கும் முன்பே இறந்து விட்டார். யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த கலாநிதி, கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம், வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம் படித்திருந்ததாக கூறப்படுகிறது.
புற்று நோயால் பெரிதும் பாத்திக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும், கலாநிதிக்கு இது போன்ற புத்தகத்தை எழுத எப்படி வலிமை வந்தது என்பதை எண்ணி வியக்கிறேன் என்றும் பில் கேட்ஸ் கேள்வி கூறியுள்ளார்.
இறப்பதற்கு முன் இந்தியர் ஒருவர் எழுதியது... கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்: உருக்கமான சம்பவம்
Reviewed by Author
on
March 10, 2017
Rating:

No comments:
Post a Comment