2020ல் உலகம் என்னவாகும்? தலையாட்டி சித்தர் கூறும் அதிர்ச்சி....
உலகமே அழிந்தாலும் தான் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி என கூறப்படுகிறது.
பிரும்மரிஷி எனும் மலையில் இருக்கும் இவர் பல கல்ப கோடி பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று கடவுள்களை பார்த்த பெருமைக்குரியவராக திகழ்கின்றாராம்.
இந்த மலை திருச்சியில் பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 210 மகா சித்தர்கள் வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது.
பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் மகத்தான சக்தி கொண்ட ஜீவ சமாதியில் மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றி வணங்கப்படுகிறது.
ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இந்த பிரும்மரிஷி மலை விளங்கும் என்று சித்தர் வாக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த மலையில் ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி தன்னை நாடி வருவோருக்கு அருள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
புகழ் வாய்ந்த இந்த தலையாட்டி சித்தர், 2020ல் இந்தியா என்னவாகும் என்பது குறித்து பல அதிசயமான தகவல்களை அவர் காலஞானம் எனும் நூலில் கைப்பட எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அது பற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
2020ல் உலகம் என்னவாகும்? தலையாட்டி சித்தர் கூறும் அதிர்ச்சி....
Reviewed by Author
on
March 10, 2017
Rating:
Reviewed by Author
on
March 10, 2017
Rating:



No comments:
Post a Comment