காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்!
எங்கள் உறவுகளை எங்கே என்று கேட்டு வாட்டும் வயோதிபத்திலும் இரவு பகலாக போராடும் எம் முடைய குறைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்பாரா? என வவுனியா மற்றும் கிளிநொச் சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க தெரிவித்து ள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடை பெற்றது என்பது தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி,
கிளிநொச்சியில் பன்னிரண்டு நாளாகவும், வவுனியாவில் எட்டாவது நாளாகவும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற குறைகேள் அரங்கினை திறந்து வைப்பதற்கென இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற குறைகேள் அரங்கினை திறந்து வைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதிக்கு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதனை கோரி தொடர்ச்சியாக இரவிலும் பகலிலும் போராடி வரும் எமது குறைகள் தெரியவில்லையா?
அல்லது நாங்கள் இந்த நாட்டின் பிரஜை கள் இல்லையா? எமது கண்ணீர் ஜனாதிபதிக்கு இந்த நாட்டு மக்களுடைய குறைகளில் ஒன்றாக தெரியவில்லையா? எமது உறவுகளுக்கு என்ன நடைபெற்றது என்று இந்த அரசு பொறுப்புக்கூறலை வழங்கும் வரையில் நாம் எமது போராட்டத்தை நிறுத்த போவதில்லை. பல வாக்குறுதிகளை நம்பி பலமுறை ஏமாந்துவிட்டோம்.
இனியும் வாக்குறுதிகளை நம்பி எம்மால் ஏமாற முடியாது. எத்தனையோ வருட காலமாக எமது உறவுகளை காணாது கண்ணீர் வடித்து செத்து கொண்டுள்ளோம். இந்த போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. ஜனாதிபதி அல்லது பிரதமர் எமக்கான பதிலை வழங்கும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்!
Reviewed by Author
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment