மன்னார் பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் தப்பியோட்டம்.
மன்னாரில் திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் விசேட பாதுகாப்பில் ஈடுபட்ட மூன்று பொலிஸார் தற்காலிகமாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மன்னாரில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு பட்ட மன்னார் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவரை அண்மையில் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.
-குறித்த நபரை பொலிஸார் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரனைகளை முன்னெடுத்த போது குறித்த குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
-இந்த நிலையில் நேற்று புதன் கிழமை காலை குறித்த சந்தேக நபரின் மனைவி பார்வையிட வந்த போது பொலிஸார் பார்வையிட அனுமதித்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
-பொலிஸார் தேடுதல் மேற்கொண்ட நிலையிலும் குறித்த நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை.
குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நேரம் விசேட பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸார் தற்காலிகமாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் தப்பியோட்டம்.
Reviewed by Author
on
March 02, 2017
Rating:

No comments:
Post a Comment