வித்தியா வழக்கு; மறியல் நீடிப்பு....
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்புணர்வின் பின்னரான படுகொலை வழக்கின் சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பாக தனியான வழக்கொன்று தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிவான் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்படி நேற்றைய வழக்கு விசாரணையின்போது,
மன்றில் முன்னிலையாகியிருந்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அறிக்கையொன்றை மன்றில் சமர்ப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸாரும் அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இதில் குறித்த வழக்கின் சந்தேகநபர்களில் முதலாவது சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியிருந்ததாக குறிப்பிட்டு அவருக்கு எதிரான பிறிதொரு வழக்கை தாக்கல் செய்துள்ளதாக மன்றில் தெரிவித்தார்கள்.
இவ்விடயத்தை நீதவான் குறித்த சந்தேக நபருக்கு தெரிவித்திருந்தார். இதன்போது குறித்த சந்தேகநபர் தாம் செய்யாத ஒரு குற்றத்திற்காக தம்மை இரண்டு வருடங்களாக கைது செய்து வைத்துள்ளதாகவும் இதனால் தனது பிள்ளைகள் வறுமையால் பிச்சை எடுப்பதாகவும் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதி காரியை அழைத்த நீதவான் குறித்த சந்தேக நபரின் பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட் டிருந்தார். அத்துடன் அனைவரும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவற்றை தொடர்ந்து குறித்த வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணையையும், முதலாவது சந்தேகநபர் பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கு விசாரணையையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவை க்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.
வித்தியா வழக்கு; மறியல் நீடிப்பு....
Reviewed by Author
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment