நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்....
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறான அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்....
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment