கேப்பாப்புலவு மக்களை சந்தித்த வடக்கு முதலமைச்சர்!
வடமாகாண முதலமைச்சர் மற்றும் கேப்பாப்புலவு மக்களுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 138வது நாளை அடைந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், "கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு குறித்து விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத் தளபதி இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
உரிய தரப்பினர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த விடயத்தை அறிந்து கொள்ள முடிந்ததாக" முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு மக்களை சந்தித்த வடக்கு முதலமைச்சர்!
Reviewed by Author
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment