நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி...சிக்கி சிதைந்த கிராமம்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதூரி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனவ கிராமமான தோரா கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், சுமார் 50 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். நிலச்சரிவு பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வரை 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலரைக் காணவில்லை. வீடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை. எனவே, அவர்களையும் கணக்கிட்டு பார்க்கையில் உயிரிழப்பு 200-ஐ நெருங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மாகாண கவர்னர் அப்தல்லா கூறும்போது, வீடுகள் பாதிப்பு மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி...சிக்கி சிதைந்த கிராமம்.
Reviewed by Author
on
August 20, 2017
Rating:

No comments:
Post a Comment