அண்மைய செய்திகள்

recent
-

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட இளைஞர்கள்....


ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட இளைஞர்கள்....

மாரி திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக சிகரட் புகைக்கும் காட்சிகளில் ஈடுபட்ட நடிகர் தனுஷிற்குஎதிராக உலகலாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. தென்னிந்தியாவில் வைத்தியர் அன்புமணி ராம்தாஸ் அவர்கள் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதோடு இலங்கையின் மட்டக்களப்பில் இளைஞர்கள் தனுஷின் படத்திற்கு செருப்பு மாலையிட்டு எதிர்ப்பையும் காட்டினர்.
இதன் பின்னர் இனி தனது திரைப்படங்களில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வைத்தியர் அன்புமணி ராம்தாஸ் அவர்களுக்கு கடிதம் மூலம் உறுதியளித்த தனுஷ்வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் மிக கவர்ச்சிகரமான முறையில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதோடு மது அருந்தும் காட்;சிகளிலும் நடித்துள்ளார்.

ரசிகர்களின் மனதை கவர்ந்து அவர்களை புகைப்பிடிக்க மற்றும் மது அருந்த தூண்டும் இவ்வாறான காட்சிகளினால் இளைய சமுதாயம் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. தனது தனிப்பட்ட வாழ்வில் புகைப்பிடிக்காத தனுஷ்தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் படம் ஒன்றினை நடிக்கப் போவதில்லை. நடிகர் தனுஷின்தொடர்ச்சியான இந்த செயற்பாடு அவருக்கும் சிகரட் கம்பனிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இதன் பின்னனியில் யாழ்ப்பாணத்தில் கடந்த நல்லூர் ஆலய திருவிழா காலத்தின் போது ரசிகர்கள் தனுஷின்இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பை தெரிவித்ததோடு. நடிகர் தனுஷின்படங்களை தமது பிள்ளைகள் பார்ப்பதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கி வரும் இளைஞர் குழு ஒன்றே இந்த செயற்பாட்டை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.
 





ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட இளைஞர்கள்.... Reviewed by Author on August 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.