அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடல்...


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான கிளாரி மெய்ட்ரெட் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இராணுவத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் புதியதாக நியமிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் உப தலைவரான சகாரியா மைகாவும் கலந்து கொண்டார்.

இதன்போது, இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடல்... Reviewed by Author on August 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.