அண்மைய செய்திகள்

recent
-

வேலையற்ற அநாதைகளாக இருக்கின்றோம்: வடமாகாண தொண்டராசிரியர்களின் போராட்டம்


இம்மாத இறுதிக்குள் 182 தொண்டராசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வடமாகாணசபை முன்பாக தொண்டராசரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.குறித்த போராட்டம் வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மாகாண சபைக்கு முன்பாக  ஆரம்பிக்கப்பட்டது.
இதில், நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரியர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்க வடமாகாண சபை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,“வேலையற்ற அநாதைகளாக இருக்கின்றோம். தொண்டராசியர்களுக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போதிலும் 182 பேரை மத்திய மாகாண அமைச்சு தெரிவு செய்திருந்தது.
மத்திய மாகாண அமைச்சினால் இடம்பெற்ற 182 தொண்டராசிரியர்களின் தெரிவிலும் குளறுபடிகள் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் கூறி எமது நியமனத்தினை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது விரோதங்களை நிறுத்தி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய எமக்கு உடனடியாக நியமனத்தினை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவு செய்யப்படாத ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.


தமக்கான நியமனம் கிடைக்காவிடின் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொண்டராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலையற்ற அநாதைகளாக இருக்கின்றோம்: வடமாகாண தொண்டராசிரியர்களின் போராட்டம் Reviewed by Author on October 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.