அண்மைய செய்திகள்

recent
-

கடும் மழையின் காரணமாக நானாட்டான்-உயிலங்குளம் பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தது-Photos

மன்னாரில் நேற்று திங்கட்கிழமை (30) பெய்த கடும் மழையின் காரணமாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று திங்கட்கிழமை(30) மாலை பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

நானாட்டான்-உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பாக காணப்பட்ட பாரிய மரம் ஒன்ரே வேருடன் சரிந்து வீழ்ந்துள்ளது.

-இதன் போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்றும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

-குறித்த மரம் நானாட்டன்,உயிலங்குளம் பிரதான வீதியின் போக்கு வரத்தை பாதீக்கும் வழகையில் வீழ்ந்து கிடந்தமையினை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நானாட்டான் பிரதேச சபையினருக்கு
தகவல் தெரிவித்தனர்.

விரைந்து செயற்பட்ட நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் பணியாளர்கள் மரத்தை துப்பரவு செய்து பாதையினை போக்கு வரத்துக்காக உடனடியாக சீர் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.




கடும் மழையின் காரணமாக நானாட்டான்-உயிலங்குளம் பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தது-Photos Reviewed by NEWMANNAR on October 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.