தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குதல், மறுசீரமைப்பு பொறிமுறை உள்ளிட்ட பல உறுதிமொழிகள் இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேசத்திடம் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை உரிய வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்ஃபன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தமிழ் மக்கள் முகம்கொடுத்த அசாதாரண சூழ்நிலைகளுக்கும் நீதிக்கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
Reviewed by Author
on
October 11, 2017
Rating:

No comments:
Post a Comment