முரளிதரன் பந்து வீச்சை த்ரோ என்று கூறிய நடுவர்: திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார் -
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சை த்ரோ என்று கூறி விமர்சனத்திற்குள்ளான அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேரல் ஹேர்(65). ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவரான இவர் 1992 முதல் 2008 வரை சுமார் 78 டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1995-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது முத்தையா முரளிதரன் பந்து வீச்சை டேரல் ஹேர் த்ரோ என்று கூறி நோ-பால் என்று அறிவித்து கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
இதையடுத்து நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர், மதுபானக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் அங்கு வேலை பார்த்த போது, பணத்தை திருடியதாக கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டை டேரல் ஹேர் ஒப்புக் கொண்டுள்ளார்.
முரளிதரன் பந்து வீச்சை த்ரோ என்று கூறிய நடுவர்: திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார் -
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment