அண்மைய செய்திகள்

recent
-

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனுஸ்ரிப்பு-( photos)

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' தினமான இன்று(11) புதன் கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி வார நிகழ்வுகள் நாளை 12 ஆம் திகதி வியாழக்கிழமை வரை இடம் பெறவுள்ளது.

-இந்த நிலையில் இன்று 11 ஆம் திகதி புதன் கிழமை தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இன்று புதன் கிழமை(11) காலை 8.30 மணியளவில் கிழமை தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மாவட்டச் செயலகத்தில் பலன் தரும் கண்றுகள் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.

இதன் போது மேலதிக அரசங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் கண்றுகளை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.










தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனுஸ்ரிப்பு-( photos) Reviewed by NEWMANNAR on October 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.