இலங்கை கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருட்களை கடற்படையினர் யாழ். கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்..
இதேவேளை, நேற்றைய தினமும் இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று காலை இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்கள் கைது
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment