அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கிராமத்தில் 'ஆஷிஸ்' என அழைக்கப்படும் ஒரு தொகுதி போதைப்பொருளுடன் ஒருவர் கைது-(படம்)

தலைமன்னார் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 'ஆஷிஸ்'   என அழைக்கப்படும் ஒரு தொகுதி போதைப்பொருள் நேற்று   சனிக்கிழமை (26-11-2017) இரவு மீட்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவழின் அடிப்படையில்   முந்தினம் (25) சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் தலைமன்னார் கிராமப்பகுதியில் விசேட தேடுதல்களினை மேற்கொண்ட தலைமன்னார் பொலிஸார் சுமார் 33 கிலோ 935 கிராம் எடை கொண்ட'ஆஸீஸ்'என அழைக்கப்படுகின்ற போதைப்பொருளினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் பெயரில் குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது தலைமன்னார் பொலிஸ் நியைத்தில் தடுத்து வைத்து விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.

விசாரனைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






தலைமன்னார் கிராமத்தில் 'ஆஷிஸ்' என அழைக்கப்படும் ஒரு தொகுதி போதைப்பொருளுடன் ஒருவர் கைது-(படம்) Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.