சசிகலா: உணவு உண்ண மறுப்பு! -
இரட்டை இலைச்சின்னம் பன்னீர்ச்செல்வம் அணிக்கு கிடைத்த செய்தியை சிறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியடைந்துள்ளார் எனவும், அதன் பின்னர் உணவு உண்ணவில்லை என்றும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணையகம் வெளியிட்ட, சின்னம் குறித்த முடிவில் பன்னீர்ச்செல்வம் – பழனிச்சாமி அணிக்கே இரட்டை இலைச்சின்னம் என, தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் டி.டி.வி.தினகரனை அவசரமாக சந்திக்க வருமாறு, கடிதம் ஒன்றையும் சசிகலா அனுப்பியுள்ளார். சிறையின் கண்காணிப்பாளர் சோமசேகரை சந்தித்து இந்த கடிதத்தை கொடுத்துள்ளார்.
இதனால் விரைவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சந்தி்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சசிகலா: உணவு உண்ண மறுப்பு! -
Reviewed by Author
on
November 24, 2017
Rating:

No comments:
Post a Comment