திருச்சி - புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழை
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இருப்பினும் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூரலுடன் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தின் தாக்கத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்றிரவு திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.
கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.
மாவட்டத்திற்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மீமிசல், கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த தையடுத்து ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. போதிய அளவு மழை பெய்யாததால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
திருச்சி - புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழை
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment