வடக்கில் 34 உள்ளூராட்சி சபைகளுக்கு 6,747 பேர் போட்டி! -
வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளுக்கும் 726 பேரைத் தெரிவுசெய்வதற்காக 6 ஆயிரத்து 747 பேர் எதிர்வரும் தேர்தலில்போட்டியிடுகின்றனர். இவர்கள் 19 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் களமிறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 பேரைத் தெரிவுசெய்வதற்காக 3 ஆயிரத்து 376 வேட்பாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உள்ளூராட்சி சபைகளுக்கும் 66 பேரைத் தெரிவு செய்வதற்காக 638 வேட்பாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி சபைகளுக்கும் 67 பேரைத் தெரிவுசெய்வதற்காக 757 வேட்பாளர்களும்,
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கும் 103 பேரைத் தெரிவுசெய்வதற்காக ஆயிரத்து 72 வேட்பாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கும் 88 பேரைத் தெரிவுசெய்வதற்காக 904 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 45 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 323 வேட்பாளர்களும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 143 வேட்பாளர்களும், பருத்தித்துறை நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 144 வேட்பாளர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 189 வேட்பாளர்களும்,
காரைநகர் பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 104 வேட்பாளர்களும், ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 111 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அத்துடன், நெடுந்தீவு பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 96 வேட்பாளர்களும், வேலணை பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 184 வேட்பாளர்களும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 25 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 252 வேட்பாளர்களும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்கு 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 227 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 217 வேட்பாளர்களும், வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு 30 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 230 வேட்பாளர்களும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 36 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 272 வேட்பாளர்களும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு 31 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 238 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.பருத்தித்துறை பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 160 வேட்பாளர்களும், சாவகச்சேரி பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 279 வேட்பாளர்களும், நல்லூர் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 207 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி பிரதேச சபைக்கு 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 342 வேட்பாளர்களும், பூநகரி பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 168 வேட்பாளர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 128 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 128 வேட்பாளர்களும், துணுக்காய் பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 112 வேட்பாளர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 229 வேட்பாளர்களும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 288 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 228 வேட்பாளர்களும், வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 164 வேட்பாளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 234 வேட்பாளர்களும், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 313 வேட்பாளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 133 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 162 வேட்பாளர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 184 வேட்பாளர்களும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 152 வேட்பாளர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 190 வேட்பாளர்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 216 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வடக்கில் 34 உள்ளூராட்சி சபைகளுக்கு 6,747 பேர் போட்டி! -
Reviewed by Author
on
December 25, 2017
Rating:

No comments:
Post a Comment