மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்-(படம்)
மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் இன்று(30) செவ்வாய்க்கிழமை காலை குறித்த கட்டிடத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர்.
-குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அலுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது.
-இந்த நிலையில் நேற்று (29) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் உள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பில் கூட்டத்தில் கோரிக்கையினை முன் வைத்தனர்.
இதன் போது எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கட்டிடத்தில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படுவார்கள் என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோக பூர்வமாக வெளியேறியதோடு, மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசனிடம் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடம் இராணுவ அதிகாரியினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அலுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது.
-இந்த நிலையில் நேற்று (29) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் உள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பில் கூட்டத்தில் கோரிக்கையினை முன் வைத்தனர்.
இதன் போது எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கட்டிடத்தில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படுவார்கள் என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோக பூர்வமாக வெளியேறியதோடு, மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசனிடம் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடம் இராணுவ அதிகாரியினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்-(படம்)
Reviewed by Author
on
January 30, 2018
Rating:

No comments:
Post a Comment