இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் 160 இலங்கை அகதிகள் -
குறித்த இலங்கை அகதிகள் முகாமில் 3, 450 பேர் தங்கியுள்ள நிலையில் அவர்களின் குறைகள் தொடர்பில் இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, முகாமில் உள்ள 160 குடும்பத்தினர் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாடு திரும்பிய சிலர் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பியவர்கள் மீண்டும் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெரும்பாலான இலங்கை மக்கள் முகாமில் 27 வருடங்களாக வசித்து வருவதாகவும், குடியுரிமை பெற்று தருமாறும் மனு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் 160 இலங்கை அகதிகள் -
Reviewed by Author
on
January 07, 2018
Rating:

No comments:
Post a Comment