அண்மைய செய்திகள்

recent
-

20 மணி நேரம் மருத்துவமனையில் பணி உயிர் விட்ட மருத்துவர்


சீனாவில் மருத்துவமனை ஒன்றில் நீண்ட 18 மணி நேர பணிக்கு பின்னர் தமது நோயாளியின் முன்பு நிலை குலைந்து மருத்துவர் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவரும் 43 வயதான மருத்துவர் Zhao Bianxiang என்பவரே கடந்த 29 ஆம் திகதி மரணமடைந்தவர்.

சுவாசம் தொடர்பான சிறப்பு மருத்துவரான இவர் தொடர்ந்து 20 மணி நேரம் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மூளையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மருத்துவர் Zhao Bianxiang ஒருகட்டத்தில் நிலைகுலைந்து பணியில் இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.
மாலை 6 மணி அளவில் பணியை துவங்கிய மருத்துவர் Zhao Bianxiang தொடர்ந்து நோயாளிகளை சந்தித்து தேவையான மருத்துவ உதவிகளை அளித்து வந்துள்ளார்.
கடும் உழைப்பாளியான மருத்துவர் Zhao Bianxiang குறித்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளால் மிகவும் பெருமையாக பேசப்பட்டவராவார்.
20 மணி நேரம் மருத்துவமனையில் பணி உயிர் விட்ட மருத்துவர் Reviewed by Author on January 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.