மன்னாரில் 2வது நாளாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-(படம்)
வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) ஊழியர்கள் இரண்டாவது நாளகவும் இன்று செவ்வாய்க்கிழமை 02-1-2018பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் மாவட்ட ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச்சங்கம் விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-இலங்கை போக்குவரத்துச் சபையின் போக்குவரத்து சேவைகள் முழுமையாக மன்னார் மாவட்டத்தில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள்,பொது மக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
-இரண்டாவது நாளகவும் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்துடன் இணைந்து போக்கு வரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இருந்து மக்கள் தனியார் பேரூந்துகள் மூலம் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் அரச , தனியார் போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுமாறு வடக்கு முதலமைச்சர் பணித்திருந்தார்.
-முதலமைச்சரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திங்கட்கிழமை(1) காலை முதல் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச்சங்கம் விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-இலங்கை போக்குவரத்துச் சபையின் போக்குவரத்து சேவைகள் முழுமையாக மன்னார் மாவட்டத்தில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள்,பொது மக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
-இரண்டாவது நாளகவும் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்துடன் இணைந்து போக்கு வரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இருந்து மக்கள் தனியார் பேரூந்துகள் மூலம் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் அரச , தனியார் போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுமாறு வடக்கு முதலமைச்சர் பணித்திருந்தார்.
-முதலமைச்சரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திங்கட்கிழமை(1) காலை முதல் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 2வது நாளாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-(படம்)
Reviewed by Author
on
January 02, 2018
Rating:

No comments:
Post a Comment