அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்; தமிழகம் முழுவதிலும் நோயாளிகள் அவதி


மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை மாற்றி 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமிஷன் என்ற பெயரில் புதிய அமைப்பை கொண்டு வருவதற்கு மத்திய அரசு லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்திருந்தது.

ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவம் படித்த மருத்துவர்களை, நவீன மருத்துவமான அலோபதி டாக்டர்களுக்கு நிகராக வாய்ப்பு அளிப்பது போன்றவையே இந்த புதிய தேசிய மருத்துவ கமிஷனின் நோக்கமாகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ கமிஷனை கொண்டு வருவதற்கு துவக்கத்தில் தனியார் மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்; தமிழகம் முழுவதிலும் நோயாளிகள் அவதி Reviewed by Author on January 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.