மார்ச் 12 கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் நேர்முகப்பரீட்சை -
கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டின் க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான புதிய பயிலுனர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த ஆண்டு 27 பாடநெறிகளுக்காக இலங்கையில் உள்ள பத்தொன்பது கல்வியியற் கல்லூரிகள் ஊடாக பயிலுனர்களைத் தேர்வு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சுமார் 4 ஆயிரத்து 745 பேர் கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
மார்ச் 12 கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் நேர்முகப்பரீட்சை -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment