இலங்கை அகதி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! -
தமிழ்நாடு, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் உதயகலா என்னும் குடும்பப் பெண்ணொருவர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உதயகலா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எனது கணவர் தயாபரராஜ், (வயது 36) . இவரை அகதிகள் முகாமில் போலீசார் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
எங்கு சென்றாலும் போலீசார் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றனர். எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
கணவரை ஆஜர்படுத்த கியூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
கணவர் தொடர்பாக உதயகலா தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரணை செய்தது.
அதன்போது
மனுதாரரின் கணவர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,1) நீதிமன்றத்தில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராக வேண்டும்.
அவரது அலைபேசி எண்ணை போலீசாரிடம் வழங்க வேண்டும். அவரை போலீசார் பின்தொடர்ந்து கண்காணிக்கக்கூடாது. நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கலாம், என உத்தரவிட்டனர்.
இலங்கை அகதி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! -
Reviewed by Author
on
March 03, 2018
Rating:

No comments:
Post a Comment