50 டொலர் கொடுத்தால் கட்டு கட்டாக பணம் பெறலாம்: வித்தியாசமாக நடக்கும் பணச்சந்தை -
ஆப்ரிக்காவின் சோமாலியா நாட்டில் விநோத சந்தை ஒன்று இயங்கி வருகிறது. சோமாலியாவில் பணத்தின் மதிப்பு மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்பதால், அந்த சந்தையில் கட்டு கட்டாக சோமாலியா நாட்டு பணங்கள் காணப்படுகின்றன.
இந்த வினோத சந்தையை அந்நாட்டில் உள்ளவர்கள் மணி எக்ஸ்சேஜ் மையம் என்று அழைக்கின்றனர்.
இங்கு 50 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால், 50 கிலோ சோமாலிய பணத்தை வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பணத்தை தூக்கிச் செல்ல தள்ளுவண்டிகளும் அனுப்பப்படுகின்றன.
இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த பணத்தை அந்த சந்தைக்கு சென்று சோமாலியா நாட்டு பணங்களாக மாற்றி தள்ளு வண்டியில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
இப்படி தள்ளு வண்டியில் கொண்டு செல்லப்படும் பணங்கள் சில சமயங்களில் கீழே விழுந்தாலும், அதை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை எனவும், திருட்டும் நடப்பதில்லை. ஏனெனில் பணத்துடன் பயங்கர ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்படுவதால் திருட்டுகள் நடப்பதில்லை என்று கூறப்படுகிறது.
50 டொலர் கொடுத்தால் கட்டு கட்டாக பணம் பெறலாம்: வித்தியாசமாக நடக்கும் பணச்சந்தை -
Reviewed by Author
on
March 03, 2018
Rating:
No comments:
Post a Comment