வவுனியா குட்சைட் வீதியில் அமைந்து மீள் நிரப்பு நிலையத்தில் பதட்டம் : 09நபர்கள் கைது
வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருளை திருடிய குற்றச்சாட்டில் நேற்று ( 03.03.2018) இரவு 10.00மணியளவில் ஒன்பது நபர்களை கைது செய்துள்ளதுடன் எரிபொருள் கொள்கலன் வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்திலிருந்து எரிபொருளை திருடி தனியாருக்கு பல நாட்களாக விற்பனை செய்து வந்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் நேற்று (03.03.2018) இரவு 10.00மணியளவில் எரிபொருள் கொள்கலன் வாகனத்தினை (LJ – 9454) கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி உட்பட ஒன்பது நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்திலிருந்து எரிபொருளை திருடி தனியாருக்கு பல நாட்களாக விற்பனை செய்து வந்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் நேற்று (03.03.2018) இரவு 10.00மணியளவில் எரிபொருள் கொள்கலன் வாகனத்தினை (LJ – 9454) கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி உட்பட ஒன்பது நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
வவுனியா குட்சைட் வீதியில் அமைந்து மீள் நிரப்பு நிலையத்தில் பதட்டம் : 09நபர்கள் கைது
Reviewed by Author
on
March 04, 2018
Rating:

No comments:
Post a Comment