அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவுக்கு எச்சரிக்கை: அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா -


இந்தியாவின் பருவநிலை மாற்றத்தை நாசா படம்பிடித்து வெளியிட்டுள்ள நிலையில் அதிலிருக்கும் சிவப்பு நிறப் புள்ளிகள் காட்டுத் தீயாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த பத்து நாட்களில் மட்டும் வயல்வெளிகள், காடுகள் தீப்பிடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் சிவப்பு நிறப் புள்ளிகள் போல காணப்படுகின்றன.
இந்தப் புள்ளிகள், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாறுபாட்டைக் குறிப்பதாக இருக்கலாம் என கூறியுள்ள நாசா இது அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயாகக் கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயினால் ஏற்படும் கரும் புகைகள் மிகப்பெரிய இயற்கைப் பேரிடருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு எச்சரிக்கை: அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா - Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.