மனித எலும்புகள், பற்கள்....ஐந்தாவது நாளாகவும் வெளிவரும் மர்மம்...
இந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்ட இடத்தில் இன்று ஐந்தாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இன்று ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது மனித எலும்புகள், பற்கள்,பொலித்தீன் பக்கற், சோடா மூடி போன்றவை மீட்கப்பட்டுள்ளன. மேலும் விசேட சட்ட வைத்திய நிபுணர் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் இந்த எலும்புகளின் பிண்ணனியில் நீங்கா மர்மம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மனித எலும்புகள், பற்கள்....ஐந்தாவது நாளாகவும் வெளிவரும் மர்மம்...
Reviewed by Author
on
June 02, 2018
Rating:
Reviewed by Author
on
June 02, 2018
Rating:


No comments:
Post a Comment