மன்னாருக்கு தமிழகத்திலிருந்து படகு மூலம்வந்தவர்கள் விளக்கமறியலில் -
தமிழக அகதி முகாமில் இருந்து மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு தமிழக அகதி முகாமில் இருந்து படகு ஒன்றின் மூலம் இலங்கையின் தலைமன்னார் பகுதியை நோக்கி வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த குறித்த 6 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மண் திட்டியில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்டையினர் குறித்த 6 பேரையும் நேற்று இரவு மீட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த பெண் மற்றும் மூன்று ஆண்கள் உள்ளடங்களாக 4 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, குறித்த இரு சிறுவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, அடம்பன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
மன்னாருக்கு தமிழகத்திலிருந்து படகு மூலம்வந்தவர்கள் விளக்கமறியலில் -
Reviewed by Author
on
June 02, 2018
Rating:

No comments:
Post a Comment