இலங்கை தமிழ் அகதி இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்!
உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் UNHCRஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2000ம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு அகதிகளாக உள்ளவர்கள் சொல்லொணாத் துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜூட் மயூரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அகதி இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்!
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment