பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை - பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
ஆம்பர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், வீடுகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுமாறும் நிறைய தண்ணீர் குடிக்குமாறும் வயதானவர்களை கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இரு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கையின் பொருள் என்னவெனில் பகல் நேரத்தில் வெப்பநிலை 30 டிகிரியாகவும் இரவு நேரங்களில் 15 டிகிரியாகவும் இருக்கும் என்பதாகும்.
வெள்ளிக்கிழமை காலை வரை இங்கிலாந்தின் சில பகுதிகள் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வெப்பம் மிகுந்ததாக இருக்கும்.
வெளியில் நடமாடும் அவசியம் உள்ளவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துமாறும் நிறைய தண்ணீர் குடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய வெப்ப சூழல் காரணமாக கிட்டத்தட்ட பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை சராசரிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும், கிழக்கு அல்லது தென் கிழக்கு பகுதிகளைப் பொருத்தவரையில் வெப்பமாகவோ அல்லது மிகுந்த வெப்பமாகவோ இருக்கும்.
யார்க்ஷையர் மற்றும் ஹம்பர் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்திலும் வாரம் முழுவதுமே வெப்பம் அதிகமாக இருக்கும் என்றாலும் வடக்கிலும் மேற்கிலும் மேகம் மற்றும் மழையின் காரணமாக வெப்பநிலை குறையும் வாய்ப்பும் உள்ளது.
ஒரு வேளை எச்சரிக்கைகளை குறைத்து கொள்ள வேண்டி வரலாம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதால் வார நாட்கள் முழுவதுமே வெப்பமாகவே இருக்கும் என்றே கருதலாம்.
பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை - பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
Reviewed by Author
on
July 24, 2018
Rating:
No comments:
Post a Comment