அண்மைய செய்திகள்

recent
-

சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை சாப்பிடலாமா?


பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
எல்லா பழங்களும் அதிக சர்க்கரை அளவு கொண்டது அல்ல. சிலவகை பழங்கள் குறைந்த அளவு சர்க்கரையை கொண்டுள்ளன.
தற்போது பப்பாளி பழத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பது குறித்து இங்கு காண்போம்.
  • பப்பாளியில் எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இது உடலின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவும். பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் A, B, C மற்றும் E ஆகியவை உடலுக்கு அதிக வலுவை தர கூடியவை.
  • அதிக நார்ச்சத்துக்கள் இதில் உள்ளதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் பப்பாளி குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட்டால், பப்பாளியில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் உடலின் மெட்டபாலிசத்தை சரியான முறையில் நடைபெறும்.
  • எனவே பப்பாளி சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு தராது. இதில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் ஒரு கப் அளவிற்குள் பப்பாளியை சாப்பிடலாம். இதன்மூலம், உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
  • மேலும், பப்பாளியுடன் சிறிதளவு தயிர் சேர்த்து சாப்பிட்டால் Hyperglycemia போன்ற நோய்களை குணப்படுத்தும். எனவே சிறிதளவு பப்பாளி சாப்பிடுவது நல்லது.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இயல்பாகவே அதிக பசி எடுக்கும். அந்த வேளைகளில் தேவையற்ற கொழுப்பு உணவுகளை தவிர்த்து, பப்பாளியை சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியம் கெடாமலும், சர்க்கரையின் அளவு உயராமலும் இருக்கும்.
  • பப்பாளியுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்தால் அதன் சுவை அதிகரிக்கும். பப்பாளி சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். மேலும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் வீக்கம் எளிதில் சரியாகிவிடும். பப்பாளி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.


சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை சாப்பிடலாமா? Reviewed by Author on July 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.